Friday, 23 September 2016

அதிர்ஷ்டகார பிணம்

அங்கே மர்மமான முறையில் இறந்த ஒரு பிணம் நடு வீதியில் கிடத்த பட்டு இருந்தது .

விஷயம்  தெரிந்து ஒரு மஞ்சள் கொடி கூட்டம் அங்கே வந்து  சேர்ந்தது .

சில முக்கிய விசாரனை கேள்விகள் கேட்டது .

" பிணம்  என்ன சாதி ? " 

மஞ்சள் கொடியை சார்ந்த எந்த சாதியும் இல்லை.

தங்கள் சாதி  என்றால் பிணத்திற்கு மாலையிட்டு அவர்களெல்லாம் பிணம் போல் சாலையில் படுத்து கொண்டு, அந்த பிணத்தை கொன்றவனை உடனே பிடிக்க வேண்டும் என்று, ஒரு நவீன மறியல் செய்யலாம் என்று ஆர்வமாக  வந்த கும்பலுக்கு ஏமாற்றமாய் போனது.

ஒரு பின் யோசனையாக " கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்க படுகின்றவன் என்ன சாதி?  "

அதுவும் ஒரு மஞ்சலற்ற சாதி .

அவன் மஞ்சள் சாதியாய் இருந்தால் அவனுக்கு முன்ஜாமீன் எடுத்து விட்டு பிணத்தை பற்றி  சில  அவதூறுகளை மஞ்சள்  நிற  நிருபன் மூலம் புலன் விசாரனை என்ற பெயரில் வெளியிடப்படும் மஞ்சள் பத்திரிக்கையில் வெளியிட்டு பரபரப்பாக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை .

மிகவும் நொந்து கொண்டு வேறு எதுவும் மஞ்சள் கொடிக்கு ஏதுவான பிணம் கிடைக்குமா என்று மோப்பம் பிடித்து கொண்டே சென்றது அந்த கூட்டம் .

பிறகு ஒரு கறுப்பு கொடி கூட்டம் . அதே கேள்விகள் .  பிணத்திற்கும் கொன்றவனாக கூடியவனுக்கும் கறுப்பு கொடிக்கும் சம்பதமில்லை என்றவுடம் மிகவும் கடுப்பாகி போனது அந்த கூட்டம் .

எந்த  பயன்பாடும் இல்லாத பிணங்கள் எதற்குதான்  விழுகின்றன  என்று முனகி  கொண்டே சென்றது  அந்த கூட்டம் .

மூச்சற்ற பிணம் ஒரு  நிம்மதி பெருமூச்சை விட்டது . அந்த நிம்மதியின் அர்த்தம் புரிய  அந்த பிணம் உயிரோடு இருந்த பொழுது நடந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது .

சில வருடங்களுக்கு முன்பு மஞ்சளும் கறுப்பும் அடித்து கொண்டு பெரும் கலவரம் . சாதியை ஒட்டிய கலவரம் என்பதால் ஓட்டிழக்க மணமில்லாமல் ஆளும்  உட்பட எந்த கட்சியும்  அந்த கலவரத்தை கண்டு கொள்ளவில்லை.

மேல் உத்தரவில்லாத காவல் கட்டணமில்லா வன்முறை காட்சிகள் கொண்ட அதிரடி திரைப்படமாக அந்த கலவரத்தை கற்பனை செய்து கொண்டு தன்னை பார்வையாளனாக பாவித்து கொண்டது .

தானாக முன் வந்து கலவரத்தை கட்டுபடுத்த முற்பட்டோரில் ஒருவரான அந்த பிணத்தின் அப்பாவின் உச்சந்தலையை  ஒரு 'கறுப்பு'  கட்டை பதம் பார்த்ததில்  அவர் உயிர் நீத்தார். தன் பங்கிற்கு 'மஞ்சள்'   அவர் வீட்டை தீயிட்டது. 

அந்த சமயத்தில்  வரப்பில் இருத்ததால் மொத்த குடும்பத்தில் மிச்சபட்ட உயிராய் இருந்தது அந்த பிணம். 

கருமாதிகள் முடிந்து வேறு மாநிலம் சென்று பிழைப்பை நடத்தலாம் என்று யோசனையில் நடந்து கொண்டிருந்த பொழுதுதான் அந்த துர் சம்பவம் நிகழ்ந்தது .

தொலைக்காட்சி பெட்டி விற்பனை செய்யும் கடைவாசலில் இருந்த பெட்டியொன்றில்  ஓடிக்கொண்டிருந்த  

அந்த நாட்டின் 'அமைதி பூங்கா' என்ற பட்டம் பிணத்தின் மாநிலத்திற்கு வழங்கப்படும் விழாவான அந்த நிகழ்ச்சி. 

பார்த்த  நொடியில் பிணத்தின் புத்தி பேதலித்து விட்டது. தீவிர  மனபிறழ்வு நோயில் ஊர் ஊராய் சுற்றி திரிந்து 'அமைதி  பூங்கா'  எங்கேயும் இருக்கிறதா  என்று தேடி அலைந்தது.

ப்ச்.  அப்படி   ஒன்றும் இல்லை .

பிறகு  அதுவே ஒரு அமைதி  பூங்காவை கற்பனை செய்து கொண்டது . மஞ்சள் மற்றும் கறுப்பு பூக்கள் இல்லாத ஒரு அமைதி பூங்கா . 

 

அந்த   அமைதி  பூங்காவில் கை விரித்து  அங்கும் இங்கும் கானம் பாடி சிரித்து திரியும்  பொழுது ஊர் அதை தனக்கு தானே பேசி  சிரிக்கும் பைத்தியம் என்று நினைத்து கெnண்டது.

யார் மீதும் கல் எறியாயததால் அதை மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணம் யாருக்கும் வரவில்லை .

பசியின் உச்சத்தில் அந்த அமைதி பூங்காவில் இருந்து வெளியே வந்து இத்த உலகில் பிச்சை கேட்கும் .

இரு நாளைக்கு ஒரு வேளை உணவாவது கிடைத்து விடும் .

அன்று அதுவும் இல்லை என்று ஆன பொழுது அங்கே லுங்கி மடித்து நடந்து வந்த  அவனின் கையிலிருந்த அந்த பொட்டலத்தை பிடுங்கியது .

அவன் கையிலிருந்தது ஒரு பொக்கிஷம் என்று அதற்கு தெரிய வில்லை . அவன் அடிக்க இருக்கும் சரக்கு  சைடில் இருக்க வேண்டிய நொறுக்கு  தீனிகள்  அவை.

பொங்கி  வந்த கோபத்தில் பிணத்தின் விலாவை தன் முஷ்டியால் நொறுக்கிகினான். நுரையீரல் பொத்தல் விட்டு மூச்சிரைத்து கடைசியாக அந்த பிணம் ஒரு முறை இறந்தது. 

செத்த பிறகு கலவரத்தை தூண்டாத ஒரு  சாதியற்ற அநாதை பிணமான அதிர்ஷ்டத்தை நினைத்த பொழுது அந்த பிணம் மாயை அற்ற ஒரு நிஜ அமைதி பூங்காவினுல்  நுழைந்து கொண்டிருந்தது .

Sunday, 31 July 2016

நஷ்டத்தின் மானம்

ஒரே நகையாய் இருந்தது குனி முத்துவிற்கு .

( கட்டை விரலில் பட்டை அடித்து கொண்டு மிரட்டும் அவன் தலைவனின் படம் தங்கி கொண்ட தங்க மோதிரத்தை  ஒத்த , அவன்  மொத்த உடம்பையும் உறுத்தி கொன்டிருந்த  நகைகளை சொல்ல வில்லை )

 நீதிமன்ற கூண்டில்  நிற்க வைக்கப்பட்டிற்கும் அப்புவை பார்த்து தான் .

ஊரே பற்றி எரியும் பொழுது , அவசர அவசரமாய் தலைவனின் படத்தை  தீ அணைப்பு வண்டியில் தீட்டி எடுத்து  வருவதற்குள் தீவட்டி அப்பு தன் சொந்த செலவில் தண்ணி டாங்குகளை கொண்டு வந்து அனைத்து விட்டு இருந்தான்.

தலைவனிடம் நல்ல வசை குனிமுத்து விற்கு. இன்னொரு  எம்.எல்.ஏ அடி சரணம் உதவிக்கு  வரும் ஹெலிகாப்டரிலயே தலைவனின் படத்தை வரைத்து வைத்திருக்கிறானாம். தயார் நிலையில் இல்லாத  குனிமுத்துவிற்கு வருவாய் இல்லா குடி( சை)பாக்கம்  தொகுதி ஒதுக்கப்பட்டது அடுத்த தேர்தலில் .

அப்பு அவனிமிருந்து பறிக்கப்பட்ட தொகுதியில் நின்று வென்று விட்டான் .

முதல் நாள் சட்ட சபைக்கு   அப்பு நுழையும் பொழுது தடுத்தவாறு குறுக்கே நின்றான் குனி முத்து

" கொஞ்சம் வழியை விடுங்கள் " என்றான்  அப்பு .

" முடியாது "  என்றான் விராப்புடன்  குனிமுத்து .

" தயவு செய்து வழியை விடுங்கள் " அப்பு.

" முடித்தால் தள்ளி விட்டு செல் " என்றபடி எதாவது அவன் வம்படி செய்தால் எப்படி நயமாக கூப்பாடு போட்டு தன் அட்களை வரவழைத்து அவனை நய்ய புடைப்பது என்ற பகல் கனவில் ஆழ்ந்தான்.

 அப்பு அமைதியாக சென்றதில் பெரும்  ஏம்மாற்ற வெள்ளத்தில் முழ்கி கொண்டிருந்த மனதிற்கு தலைவன் படம் பெயின்ட் அடித்த தோனியாய் வந்தது அந்த யோசனை .

" மான  நஷ்ட வழக்கு "

நீதிபதி குமரேசன் தான் . அவர் பணி ரெண்டாவதில் கணக்கில் ஃபெயில் லான பொழுது குனிமுத்துவின் அப்பா தான் கொஞ்சம் குடுத்துது பாஸ்  வாங்கி குடுத்து பி.எல் லிலும் சேர்த்து விட்டார். ( தன் பையனுக்கு பின்னாடி முன் ஜாமின்  எடுக்க பயனாய் இருக்கும் என்று )

அதுதான்  அப்படி  ஒரு  நகை .

" அப்பு. கொஞ்சம் வழியை விடுங்கள் என்று என் கட்சி காரரை பார்த்து சொல்லி இருக்குறீர்கள் " என்ற குனி முத்துவின் வக்கீல் உண்மையிலேயே அவர் கட்சிகாரர்தான்

" கொஞ்சம் " " நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர் " " கொஞ்சம் வழியை விடுங்கள். . வழியை விடுங்கள் என்று சொல்லியிருக்கலாம் . ஆனால்  கொஞ்சம் என்று  ஏன் கூறினார். குனிமுத்து குண்டானவர் . அவர் வழி விட்டால் கொஞ்சம் தான் இடம்  கிடைக்கும் என்ற  அர்த்தத்தில் என் கட்சிகாரரின் மானத்தை  அனைத்து கட்சியினரும் இருக்கும் சட்டசபையின் வாசலில் வைத்து வாங்கி இருக்கிறார் இந்த  அப்பு "

நல்ல வேளை நீதி தேவதையின் கண்ணோடு காதையும் சேர்த்து கட்டி யிருந்ததால் தப்பினாள்.

" அதோடு  நிறுத்தி இருக்கலாம் . ஆனால்  அப்பு ஒரு படி மேலே போய் தயவு செய்து வழியை விடுங்கள் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் குனிமுத்து தயவே இல்லாத  ஒரு கல்  நெஞ்ச குரூர கருணையே இல்லாத தாளி அறுக்கும்  காளிப்பயல் என்ற அர்த்தத்தில் என் கட்சிகாரரின் நெஞ்சத்தை புல்லட்  போல் தாக்கி புண்ணாக்கி இருக்கிறது  அந்த ஈனமான வார்த்தை "

" கொஞ்சம் மற்றும் தயவு செய்து ஆகிய கொடும் வார்த்தைகளை பயன் படுத்திய அப்பு தான் செய்தது தப்பு என்று உணரும் வகையில்  வார்த்தை ஒன்றிருக்கு  ஒராண்டாக மொத்தம் மூன்றாறாண்டுகள் ( இவரும் கணக்கில் வீக்கு ) தண்டனையை குடுத்து  கொஞ்சம் தயவு செய்ய வேண்டும்  யுவர் ஆனர் . "

 அப்பு  வக்கீல்  எடக்கான் எழுந்தார்.

" ஒரு  நூறு ருபாய் பையிலிருந்து  களவாட பட்டால் பையின் சொந்த காரரிற்கு  நூறு ருபாய்  நஷ்டம். ஆனால் அவர் வழக்கு தொடுப்பதற்கு முன் தன் பையில் நூறு ரூபாய் இருந்ததற்கு ஆதாரம் தர வேண்டும் "

அர்த்தம் புரியாமல் புருவத்தை உயர்த்தினார்   நீதிபதி .

" இல்லாத பணம் களவாடபட்டு நஷ்டம் ஆகாது "

" மான நஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்கள் . குனிமுத்து விற்கு மானம் இருந்தது  என்பதற்கு என்ன ஆதாரம் ? "

கண்ணை கட்டியிருந்த துணி சற்று தளற நீதி தேவதை காதை கொஞ்சம் வெளியே  நீட்டியது.