பிரபலமான அந்த தொலைக்காட்சி தொகுபாளினியிடம் விமான நிலையத்தில் காத்திருக்கும் பொழுது பேசும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு.
நான் எழுத்தாளன் என்று அறிமுகபடுத்தி கொண்டவுடன் "என் கதையை எழுதுவீர்களா ?" என்றாள். ( அவனை அவள் என்றும் அவளை அவன் என்றும் சொல்ல முடியாது எனினும் கதை சொல்லும் வசதிக்காக 'அவள்' என்றே சொல்கிறேன் )
" சொல்லுங்கள்" என்றேன் ஆர்வமாய் .
" அந்த ஊர் மக்கள் அந்த குப்பை தொட்டியை தெய்வ தொட்டில் என்றே அழைத்தனர் " என்று கதையை ஆரம்பித்தாள்.
நான் எழுத்தாளன் என்று அறிமுகபடுத்தி கொண்டவுடன் "என் கதையை எழுதுவீர்களா ?" என்றாள். ( அவனை அவள் என்றும் அவளை அவன் என்றும் சொல்ல முடியாது எனினும் கதை சொல்லும் வசதிக்காக 'அவள்' என்றே சொல்கிறேன் )
" சொல்லுங்கள்" என்றேன் ஆர்வமாய் .
" அந்த ஊர் மக்கள் அந்த குப்பை தொட்டியை தெய்வ தொட்டில் என்றே அழைத்தனர் " என்று கதையை ஆரம்பித்தாள்.
" வேண்டாத குழந்தைகளை கடவுளை வேண்டி கொண்டு அந்த கோவில் முன் உள்ள அந்த தொட்டிலில் இரவோடு இரவாக போட்டு விடலாம் "
" காலையில் கோவிலுக்கு வருகிற கூட்டம் சாமியை பார்ப்பதற்கு முன் அந்த தொட்டிலையே ஆர்வத்தோடு பார்க்கும். குழந்தை இருந்தால் அதன் முகத்தை பார்ப்பதற்க்கு முன் அதன் பாலின குறியை பார்ப்பதிலேயே குறியாய் இருக்கும் அந்த கூட்டம்"
" ஆண் குழந்தை என்றால் ஏலத்திர்கும் பெண் குழந்தை என்றால் அநாதை ஆசிரமத்திர்க்கும் கொடுத்து விடும் அம்பாளுக்கு விஷேஷமான அந்த கோவிலின் நிர்வாகம் "
" அந்த தொட்டிலில் ஆணுமில்லாத பெண்ணுமில்லாத நான் குழந்தையாய் விழுந்த பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை அந்த நிர்வாகத்திர்கு "
" பேசாம ஊருக்கு வெளிய இருக்கும் அந்த 'கெட்ட வார்த்தை' வீட்டில் இதை சேர்த்து விடலாம் . அப்படியே இந்த தீட்டை கழிக்க ஊரில் வசூல் செய்து ஒரு பெரிய பூஜை பண்ணிவிடுவோம் என்று சொன்னார் கோவில் குருக்கள் "
"ஒவ்வொரு கெட்ட வார்தைக்கும் அது கெட்ட ஒரு வரலாறு உண்டு" .
"முன்பு ஒரு காலத்தில் கோவிலில் வழிபடக்கூடிய தேவர்களின் சிலைகளின் திருவடியை தன் கை கொண்டு கழுவும் புனிதர்களாய் சில பெண்கள் இருந்தனர். 'தேவர் திருவடியார்கள்' என்று மரியாதையோடு அழைக்க பட்டனர்" .
"கொஞ்சம் கொஞ்சமாக கோவிலின் அதிகாரத்தில் இருக்கும் பெரியவர்கள் அந்த பெண்களை கட்டாயபடுத்தி தங்களின் பணியாட்களாக மாற்றி கொண்டனர் . கோவிலில் பூஜை செய்வது போயி இவர்களுக்காக ஆடியும் பாடியும் மற்றும் இன்ன பிறவும் செய்து பிழைக்க வேண்டியது ஆயிற்று அந்த பெண்களுக்கு . 'தேவர் திருவடியார்கள்' 'தேவடியர்' ஆனார்கள்".
"மற்ற ஆண்களும் அவர்களை இரையாக்க 'தேவடியர்', 'யர்' போயி 'யா' வாகி , அவர்களை ஊரை விட்டு விலக்கி வைத்து அவர்கள் பெயரையே கெட்ட வார்த்தை ஆக்கி விட்டிருந்தது அந்த ஊர்" .
" குருக்கள் சொல்லி முடிப்பதற்கு முன் அந்த கோவிலில் வேலை செய்த அந்த ஊமச்சி என்னை மார்போடு எடுத்து அனைத்து கொண்டாள் "
" தான் அந்த குழந்தையை வளர்க்க போவதாக சைகை செய்தாள். கோவில் ஆட்கள் பிடுங்க முயிற்சித்த பொழுது என்னை விடாமல் இறுக்கி பிடித்து கொண்டாள் . கோவில் வேலையிலிருந்தே அவளை விரட்டி விட்டனர் ."
" ஊருக்கு வெளியே குடிசை போட்டு என்னை வளர்த்தாள். கோவிலால் விரட்ட பட்டவள் என்றாலும் குறைந்த சம்பள வேலைக்காரி என்பதால் பெரிய மனசு பண்ணி அவளை வேலையில் வைத்து கொண்டனர் சிலர்"
" அப்பொழுதே அந்த அதிசயம் நடந்தது "
" இந்த ஊர் கோவிலுக்கு வந்து சேர்ந்து ஐந்து வருடம் ஆகிறது அந்த ஊமச்சிக்கு. வாயை திறந்து ஒரு சப்தம் எழுப்பியது கிடையாது அவள். பாம்பு கடித்து துடிக்கும் பொழுது கூட சிறு சப்தம் கூட எழுபாததை கண்டு அந்த ஊர் மருத்துவரே ஆச்சரிய பட்டார் "
" அப்படி பட்டவள் , என்னை தூக்கிக்கொண்டு சென்ற சில தினத்திலேயே எனக்கு தாலாட்டு பாட ஆரம்பித்து விட்டாள் "
" அந்த ஊர் ஸ்தம்பித்து போனது . அவளின் குரல் தெய்வீகமாக இருப்பதாக கூறியது . என்னை 'தெய்வ குழந்தை ' என்றும். என்னுடைய சக்தியால்தான் அவளுக்கு குரல் கிடைத்ததாகவும் கூறியது "
" கோவில் நிர்வாகமும் பயந்தடித்து அவளை திரும்பவும் வேலைக்கு சேர்த்து கொண்டது "
' அஞ்சு தலை பாம்பை கண்டும்
அஞ்சாத நெஞ்சு குடை பிடிக்க
துஞ்சாத செல்வமகள் அன்போடு
பஞ்சு விரல் கால் பிடிக்க
தூங்காது தூங்குவது போல்
நடிப்பை அரங்கேற்றும் அரங்கனை போல் அல்லாது
பாற் கடல் மையத்தின்
ஆழ்ந்த நிசப்தத்தில்
கண்ணே நீ உறங்கு
விடியும் வரை மனம் இறங்கு '
கோவில் நடை சாத்தும் வேளையில் என்னை மடியில் கிடத்தி அரங்கநாதன் மண்டபத்தில் அவள் தாலாட்டு பாடும் பொழுது அந்த இறைவனே மயங்கி விடுவான் என்று சொல்லி அந்த ஊர் மயங்கியது .
" அவளுக்கு எப்படி இப்படி ஒரு அபூர்வா குரல் வந்தது என்று ஊர் வினவும் பொழுதெல்லாம் நான் அவள் மார்பிலிருந்து பால் உறிஞ்ச உறிஞ்ச அவள் மனதில் குரல் ஊற்றெடுத்ததாக கூறினாள் "
" என்னை ஆச்சரியத்துடன் பார்த்தனர் அந்த ஊர் மக்கள் . என்னை தலை மீது தூக்கி வைத்து கொண்டாடினர். சகல அன்போடும் வசதியோடும் 'தெய்வ' குழந்தை என்ற பெயரோடும் வளர்ந்தேன் " என்றாள்.
" உங்கள் அம்மாவிற்கு எப்படி குரல் வந்தது ?" என்று கேட்டேன் . " ஊருக்கு சொன்ன கதையை எனக்கும் சொல்ல வேண்டாம் "
" அந்த கதையையும் சொல்கிறேன்" என்றாள்
" என் அம்மா உடலால் ஆணாக பிறந்த ஒருத்தி "
" செல்வ செழிப்புடன் இருந்த வீட்டில் ஒற்றை மகனாய் பிறந்தவள் "
" அப்பாவும் சித்தப்பாக்களும் தொழில் தொழில் என்று தொலைவிலேயே இருந்ததால் அம்மாவும் சித்திகளும் மத்தியில் வளர்ந்தவள் "
" உடல் அளவில் ஆணாக இருந்தாலும் மனதளவில் பெண்ணாகவே வளர்ந்தாள் "
" சிறு வயதில் அவளுக்கு சடை பின்னியும் போட்டு வைத்தும் அழகு பார்த்தாள் அவள் அம்மா "
" பின்பு 14 வயதில் அவளே போட்டு வைத்து கொண்ட பொழுது அடித்தாள் . ' நீ ஆண்ணடா . என் இப்படி பெண் பிள்ளை போல் நடந்து கொள்கிறாய் என்று புழம்பினாள்"
" ஆண்களை பார்த்து வெட்க படுவதையும் பெண்களிடம் நட்பு கொள்வதையும் கண்டு தலையில் அடித்து கொண்டாள் "
" அம்மாவே வெறுக்கும் பிள்ளையை ஊர் எப்படி நடத்தும் என்று தனியாக சொல்ல தேவையில்லை "
" ஊரை விட்டு ஓடி ஒரு அலி கூட்டத்துடன் சேர்ந்தாள்.
அலிகள் பிழைக்க வழி இல்லாது தங்கள் மீது ஊர் வைத்திருக்கும் வெறுப்பையே பிழைப்பாக்கி கொண்டனர். கூட்டம் கூட்டமாய் சென்று பஸ்சிலும் ரயிலிலும் பயணிக்கும் மக்களின் அருகே சென்று காசு கொடுத்தால்தான் விலுகுவதுவாக மிரட்டினார்கள் . மக்களும் அவர்கள் மீதுள்ள வெறுப்பில் பயந்து காசுகள் கொடுத்தனர் "
" அப்படி காசுகள் சேர்த்து உடல் அளவிலும் பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்த பிறகே அவளுக்கு நிம்மதியாக இருந்தது "
" ஹார்மோனின் கைவண்ணத்தில் மார்புகளும் வளர்ந்து முழு பெண்ணாக மாறும் தருணத்தில் அவள் குரல் மட்டும் பெண்ணாக மாற முரண்டு பிடித்தது "
" தன்னையே ஊமையாக்கி கொண்டு முழு பெண்ணாக அந்த ஊர் கோவிலில் வேலைக்கு சேர்ந்தாள்"
" நான் குழந்தையாய் அழுவும் பொழுது செய்வது அறியாமல் தவித்தாள். பால் சுரக்காத மார்பை என் வாயில் திணித்த பிறகுதான் என் அழுகை நிட்பதை கண்டாள்."
" அந்த தருணங்களில் அவள் மனதில் தாய்மை சுரந்ததாகவும். முழு பெண்ணாக மாறிய தைரியத்தில் தாலாட்டு பாட குரல் எடுத்த பொழுது ஆணுமற்ற பெண்ணுமற்ற ஒரு தெய்வீக குரலாய் வெளி வந்ததாகவும் கூறினாள் "
" லக்ஷ்மி மைந்தன் , மற்ற கதை தான் உங்களுக்கு தெரியுமே !" என்று கூறி சிரித்தாள்.
நெகிழ்ந்திருந்த எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை .
எல்லா அதிசியங்களுக்கு பின்பும் அன்பு ஒளிந்திருப்பதை புரிந்துகொண்டேன்.